இலங்கையின் பொப் பாடகர் ஏ.ஈ.மனோகரன் காலமானார்!!

889

இலங்கையின் தமிழ் பொப் பாடகரும், நடிகருமான ஏ.ஈ.மனோகரன் தனது 73வது வயதில் இன்று காலமானார்.

சென்னை கந்தன்சாவடி பகுதியில் வசித்து வந்த நிலையில் அவர் இன்று இரவு 7.20 அளவில் காலமாகியுள்ளார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மனோகரன், இன்று (22.01.2018) மாலை காலமானார் என அவரது மனைவி எல்.திரேசா மனோகரன் தெரிவித்தார்.

இவர் இந்திய மற்றும் இலங்கை திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

அத்துடன் சின்ன மாமியே, சுராங்கனி சுராங்கனி போன்ற பல தமிழ், சிங்கள பொப் பாடல்களை பாடியதன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.