மஸ்கெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாத சுவடுகளை இன்று கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் குழுவொன்று ஆய்வு செய்துள்ளது.
மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப் பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 2 பாத சுவடுகளே சந்தேகத்திற்கு மத்தியில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது அந்த பாதச்சுவடுகளை குறித்த குழுவினர் புகைப்படம் எடுத்ததுடன் பரிமாணங்களையும் அளவீடு செய்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் தற்போதைய நிலையில் எதனையும் கூற முடியாது என அந்த குழு கூறியுள்ளதுடன், இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்த பின் அறிக்கையொன்றை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் அனுமான் கடவுளின் பாத சுவடுகள் என தெரிவித்து தற்போது பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மூன்று நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாதச் சுவடுகள் சிவனுடையது என தெரிவித்து மக்கள் மஞ்சள் பூசி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திடீரென கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பாதச் சுவடுகளால் மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








