பாடசாலை மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் : தலைமறைவாகிய ஆசிரியர்!!

236

ஏறாவூரில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவாகிய ஆசிரியர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை நீதிமன்றில் முன்லைப்படுத்த உள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் குறித்த ஆசிரியரால் மாணவன் ஒருவர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.