இலங்கை மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் கைது!!

482

இலங்கை அகதி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரச பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொள்ளாச்சி – ஆழியாறில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் நான்காம் ஆண்டில் படித்து வரும் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த மாணவியை, பாடசாலையில் தலைமை நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில், வீடு திரும்பிய மாணவி பாடசாலையில் நடந்தவற்றை தாயிடம் கூறியதையடுத்து, ஆழியாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். எனினும், தலைமை ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.