பெரிய மலைப்பாம்பு ஒன்று மானை வேட்டையாடும் அரிய காட்சி புந்தல தேசிய வனப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனை ஒருவர் தனது கமராவில் பதிவு செய்துள்ளார்.
சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பு புள்ளி மான் ஒன்றை இரையாக்கி கொண்டுள்ளது. இதேவேளை, குறித்த வனப்பகுதியில், அண்மையில் மலைப்பாம்பு ஒன்று மான் ஒன்றை விழுங்கிய நிலையில் காயமடைந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டதுடன், சிகிச்சையளிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






