இலங்கையில் இப்படியொரு அதிசயம் : வியப்பில் மக்கள்!!

667

 
தம்புள்ளையில் வித்தியாசமான முறையில் தேங்காய் ஒன்றில் பனைமரக்கன்று ஒன்று வளர்ந்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த ஜீ.ஜீ.கருணாரத்ன என்பவரின் தோட்டத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பனைமர விதை ஒன்று நிலத்தில் வளர்ந்துள்ளது. அதன் ஆணி வேர் நிலத்தில் இருந்த தேங்காயுடன் இணைந்து வளர்ந்துள்ளது. இந்நிலையில் பனைமர விதை பெரிதாகியவுடன் தேங்காயின் மேற்பரப்பின் ஊடாக பனைமரக்கன்று வெளியே வந்துள்ளது.

பனைமரக்கன்று ஒரு பகுதியிலும் மறு பகுதியில் தென்னங் கன்றும் உள்ளமை விசேட தன்மைகளில் ஒன்றாகும். இந்த தென்னம் விதையை நாட்டினால், அதிலிருந்து பனை மரமே வளர்ந்து வரும் என தோட்ட உரிமையாளர் கருணாரத்ன தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அரிய மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என கருணாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.