பாடசாலையில் களவாடிய சம்பவம் ஒன்றில் ஈடுப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் தொடர்பாக அப்பிரதேசத்தில் அரசியல் பிரதிநிதி ஒருவரால் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த மாணவன் மேலும் சில சகாக்களை பொலிஸாரிடம் காட்டிக் கொடுத்துள்ளார். இவ்வாறு குறித்த மாணவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட சகாக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து காட்டிக்கொடுத்த மாணவன் மீது அவ்வீட்டார்கள் சொற்பிரயோகங்களை மேற்கொண்டதால் அவமானம் தாங்க முடியாத அம்மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் களவாடிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனை சகாக்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிலர் தகாத வார்த்தையில் பேசியமைக்காக வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை தற்கொலை செய்து கொண்ட மாணவர் பிரசாந்தகுமார்(14) எழுதி வைத்த கடிதம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.






