கேரளக்கஞ்சாவுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 36 பேர் கைது!!

705

கேரளக்கஞ்சாவுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

20-30 வயதிற்கிடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.