இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!!

900

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலை இன்று முதல் மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு மேற்கு வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தல் காற்று வீசுக்கூடும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.