தலைமன்னாரில் சிக்கிய 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம்!!

497

 
சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு பேர் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் – ஊருமலை கடற்பரப்பில் வைத்து இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 7 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 100 கிராம் எடை கொண்ட 120 தங்கக் கட்டிகளை பொதி செய்து சந்தேகநபர்கள் கடத்திச் சென்றதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்கத்தை கடத்திச் செல்ல பயன்படுத்திய டிங்கி படகு உட்பட உபகரணங்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றிய பொருட்களுடன் கைதாகிய இருவரும் யாழ்ப்பாண சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.