வர்த்தகர் மீது துவக்குச்சூடு நடத்தி 5 லட்சம் கொள்ளை: புத்தளம் – மன்னார் வீதியில் சம்பவம்..!

322

pistolவர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய புத்தளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புத்தளம் – மன்னார் வீதியில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று இரவு 8.20 அளவில் இத்துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஐயப்பா பரமேஸ்வரன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வர்த்தகரின் முகத்தில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையத்தில் வேலைகளை முடித்துக் கொண்டு 5 லட்சம் ரூபா பணத்தை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற வேளை இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.