பேருவளை பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த வேனை விடுவிப்பதற்கு 25,000 ரூபா பணத்தை, பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு சந்தேகநபர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.






