பெற்ற தாயை துடிக்க துடிக்க கொன்ற மகன் : பதறவைக்கும் வீடியோ!!

1032

இந்தியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் சேர்ந்த 82 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி 18ம் திகதி மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது மகனான ஜோகேந்திரா சவுத்ரியே அடித்து துன்புறுத்தியதே காரணம் என தெரியவந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அதில் வயதான தாய் படுக்கையிலேயே அசிங்கம் செய்துவிட்டதாக கூறி மகன் தாக்குகிறான். தாயின் கழுத்தை நெறித்தும், மூக்கை பொத்தியும் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். சிறிது நேரத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழக்கிறார், இக்காட்சிகளை அவரது உறவினர் ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து மூதாட்டியின் மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.