பெண்களைக் கொன்று சடலத்துடன்…. : கொலையாளி திடுக்கிடும் வாக்குமூலம்!!

549

 
இந்தியாவில் 6 பேரை கொலை செய்த இளைஞர், பெண்களின் சடலங்களுடன் உறவு கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஜிதேந்தர துருவா (30), இவர் 2015லிருந்து 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஆறு பேரை கொலை செய்துள்ளார்.

தலைமறைவாக இருந்த துருவாவை பொலிசார் தற்போது கைது செய்துள்ள நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015 ஏப்ரல் 27ஆம் திகதி பிங்கல ராஜ் என்ற இளம் அதிகாரி அவர் வீட்டில் இறந்து கிடந்தார். இவ்வழக்கு சம்மந்தமாக அவரின் காதலர் ராகேஷை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்தார்கள். அவர் சில மாதங்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.

ஆனால் பிங்கலராஜை நான் தான் கொலை செய்தேன் என துருவா தற்போது கூறியுள்ளார். கொலை செய்த பின்னர் பிங்கலவின் சடலத்துடன் உறவு வைத்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் வெளியில் தெரிந்த நிலையில் தனது மகன் ராகேஷ் மீது அரசியல் காரணங்களுக்காக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது எனவும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரியும் ராகேஷ் தாய் பொலிசாரிடம் மனு அளித்துள்ளார்.

துருவா கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ருக்மணி (50) மற்றும் அவரின் மகள் பார்வதி (20) ஆகியோரையும் கொன்று பார்வதி சடலத்துடன் உறவு வைத்து கொண்டுள்ளார். அதே ஆண்டு யூன் மாதம் மகேந்திர சிங் (38) அவர் மனைவி உஷாம் மகன் மகேஷ் (11) ஆகியோரையும் துருவா கொலை செய்துள்ளார்.

இச் சம்பவத்தில் மகேந்திராவின் இன்னொரு மகன் திரிலோக் (13) மற்றும் உயிர்பிழைத்த நிலையில் அவரின் ஒரு கண் பார்வை பறிபோகியுள்ளது. இவை அனைத்தையும் துருவா பொலிசிடம் வாக்குமூலமாக அளித்துள்ள நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.