12 வருடங்களாக காதலியின் கற்புக்கு பூட்டு போட்ட காதலன்..!

421

lockகாதலி மீது கொண்ட சந்தேகத்தால் 12வருடங்களாக பூட்டு போட்டு வைத்திருந்த காதலன் கைது செய்யப்பட்டான்.

மெக்சிகோவின் விராகுருஷ் பகுதியில் வசித்து வரும் ஜகாட்லாமே என்ற பெண்ணே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இதனால் இயற்கை உபாதைகளை கழிப்பது கூட மிகவும் கடினமாக இருந்துள்ளது.

13வயதில் இருந்தே ஜகாட்லாமே, தனது காதலன் ஆண்டோனியாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார்.

காதலி மீதான சந்தேகத்தால் அதாவது தன்னை விட்டு விட்டு வேறு யாருடனாவது சென்று விடுவாரோ என பயந்து அவரது பேண்ட்டிற்கு(Pant) பூட்டு போட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற பொலிசார் ஆண்டோனியாவை கைது செய்துள்ளதுடன், பெண்ணையும் விடுவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட போது அப்பெண் மிகவும் பயந்து போய் காணப் பட்டதாகவும், அப்பெண்ணிற்கு அணிவிக்கப்பட்ட பெல்ட் நாய்களின் கழுத்தில் மாட்டப்படும் பெல்ட் வகையை சேர்ந்தது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதலன் மீது புகார் அளிக்க மறுத்து விட்டாராம்.

இதுகுறித்து ஈகுபியோனியா பெண்கள் உரிமைக் குழுவைச் சேர்ந்த செயல் இயக்குநர் அரசெலி கோன்சாலஸ் கூறுகையில், அந்த நபரைக் கைது செய்த பின்னர்,அவர் மீதான குற்றச்சாட்டுக்களை அப்பெண் வலியுறுத்தவில்லை. இது அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆண்டோனியா சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்யப்பட்டான்.

மீண்டும் இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என அவனை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.