கணவருக்காக மூன்று பேரை கொன்ற தாதா எழிலரசி : நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு!!

1270

கொலை முயற்சி வழக்கில் புதுச்சேரிப் பெண் தாதா எழிலரசியை விடுதலை செய்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சாராய வியாபாரி ராமுவும், அவரின் இரண்டாவது மனைவி எழிலரசியும் கடந்த 2013ம் ஆண்டு காரில் சென்றுகொண்டிருந்த போது கூலிப்படையினர் ராமுவை வெட்டிக் கொன்றனர்.

கணவரை கொன்றவர்களை பழிவாங்க எழிலரசி துடித்தார். இந்நிலையில், ஐயப்பன், ராமுவின் முதல் மனைவி வினோதா, புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

மூன்று கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட எழிலரசி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியில் வந்தார்.

கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள ஹொட்டலில் மேலும் சிலரைக் கொலைச் செய்ய திட்டம் தீட்டிய போது எழிலரசியை பொலிசார் மீண்டும் கைது செய்தனர்.

இந்நிலையில் எழிலரசி மீது 2011ம் ஆண்டு ராமுவின் முதல் மனைவி வினோதாவைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் இருந்தது. அந்த வழக்கில் எழிலரசியை விடுதலைச் செய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வினோதாவைக் கொலைச் செய்த வழக்கில் எழிலரசி முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.