தாயின் இறுதிச் சடங்கிற்கு பணமில்லாததால் பிச்சையெடுத்த மகன்கள்!!

638

 
தமிழ்நாட்டில் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் சிறுவர்கள் தவித்த நிலையில் மருத்துவமனை நோயாளிகள் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்- விஜயா தம்பதிக்கு மோகன்ராஜ், வேல்முருகன், காளீஸ்வரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காளியப்பன் உயிரிழந்த நிலையில், மார்பக புற்றுநோயால் அவதியுற்ற விஜயா அரசு மருத்துவமனையில் சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

உறவினர்கள் யாரும் விஜயாவை பார்க்க வராத நிலையில், அவரது 15 மற்றும் 13 வயதான மகன்கள் இருவரும் தாயை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விஜயா உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் சிறுவர்கள் இருவரும் கண்ணீருடன் தவியாய் தவித்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் தங்களால் இயன்ற பண உதவியை சிறுவர்களிடம் வழங்கினார்கள்.

அதன்பின்னர் தாயின் உடலை சிறுவர்கள் இருவரும் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச் சென்ற நிகழ்வு காண்போரின் கண்களை குளமாக்கியது.