என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா: தற்கொலை செய்து கொண்ட மாணவனின் கடிதம்!!

933

தமிழகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன் தன் பெற்றோருக்கு எழுதிய அந்த இறுதி வரிகள் அனைவரின் நெஞ்சையும் உருக்கும்படியாக அமைந்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் வசித்து வரும் ராமதாஸ்- திலகவதி தம்பதியரின் 15 வயது மகன் ரஞ்சித் குமார். திருச்சி சத்திரம் அருகே உள்ள இ.ஆர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த ரஞ்சித், நேற்று மாலை திடீரென தன் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரஞ்சித்தின் பெற்றோர் சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விசாரணை நடத்தினர்.

அம்மா, நான்தான் உங்க ரஞ்சித் என தொடங்கும் அந்த கடித்ததில், எங்க பள்ளிக்கூடத்தில் என்னை பசங்க எல்லாரும் ஒரு பொண்ணாத்தான் பார்க்கிறாங்க. அதனால்தான் நான் இந்த ஒரு முடிவை எடுத்துட்டேன். அதனால் என்னை மன்னிச்சிடுங்க. என்னோட ஆசை நீங்க இந்த வீட்டை விட்டு போக வேண்டாம். எனது மரணத்துக்கு பிரகாஷ், ஹரிசங்கர், தனுஷ் ஆகியோர்தான் காரணம். எனக்கு நடந்ததுபோன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. என்னை மன்னிச்சுருங்க, இப்படிக்கு உங்கள் அன்பு மகன் ரஞ்சித்” என எழுதப்பட்டுள்ளது.

மாணவனின் அந்த இறுதி வார்த்தைகள் அனைவரின் நெஞ்சையும் உருக்கியுள்ள நிலையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..