ஒரு வயதுக் குழந்தையை கழுத்தறுத்து கொன்ற கொடூரத் தாய் : தந்தை கதறல்!!

780

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர், அழுதுகொண்டிருந்த தனது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமம் குக்‌ஷி, இங்கு வசிக்கும் அனிதா என்னும் பெண்ணிற்கு, ஒரு வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. குழந்தை அடிக்கடி பால் கேட்டு அழுது கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் அதே போல பால் கேட்டு அழுதது. குழந்தையின் தொடர் அழுகையால் கோபமடைந்த அனிதா, குழந்தையை சமாதானப்படுத்தியுள்ளார்.

எனினும் குழந்தை தன் அழுகையை நிறுத்தாததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அனிதா கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதன் பின்னர், சத்தமில்லாமல் வீட்டைப் பூட்டிவிட்டு, தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தையை விட்டுவிட்டு அனிதா தனியாக வெளியே சென்றதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், உள்ளூர்காரர்களின் உதவியுடன் அனிதாவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..