மீன் குழம்பு வைக்கவில்லை: கணவன்- மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை!!

333

தமிழகத்தில் மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், சொந்தமாக 2 லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா, பிள்ளைகள் ராகுல் மற்றும் உதயா, இவர்களுடன் சுரேஷின் தாயும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மீன் வாங்கி கொடுத்துவிட்டு, மதியம் சமைத்து வைக்கும்படி கூறியுள்ளார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட அவரது தாயும், மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று மதியம் குடிபோதையில் வீடு திரும்பிய சுரேஷ், மீன்குழம்பை ருசிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையே வாஷிங் மெஷின் பழுதாகிவிட துணிகளை கையால் துவைத்ததால் மீன் குழம்பு வைக்க தாமதமாகியுள்ளது. வீட்டுக்கு வந்ததும் கோபத்தில் சுரேஷ் சண்டையிட, சத்யாவின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் பற்றவைத்துள்ளார். உடனே சுரேஷ் தானும் தீக்குளிக்க போவதாக வம்பு பண்ணியுள்ளார், கடும் ஆத்திரத்தில் இருந்த சத்யா, வீட்டின் கழிவறைக்கு சென்று உடலில் தீ வைத்துக் கொண்டார். தீ முழுவதும் பற்றிய நிலையில் சத்யா வெளியே ஓடி வர, சுரேஷ் காப்பாற்றுவதற்காக சத்யாவை தூக்கியுள்ளார்.

இதில் சுரேஷின் உடலிலும் தீப்பிடித்தது, இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு சுரேஷ் தாய் கதற அக்கம்பக்கத்தினர் உதவியுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..