பீகாரில் குழந்தை பிறந்த நான்கு மணிநேரத்தில் கையில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.
பீகாரை சேர்ந்த பெண் பபிதா குமாரி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இவருக்கு திருமணம் ஆன நிலையில் கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான பபிதா, படிப்பையும் கைவிடவில்லை, படிப்பு மேல் கொண்ட ஆர்வத்தால் தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு ஆரம்பமான நிலையில், தேர்வு தினத்தன்று காலை பபிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த நான்கு மணிநேரத்தில் தேர்வறைக்கு வந்த பபிதா, கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
அவரது பாட்டி குழந்தையை பார்த்துக் கொள்ள, பபிதா தேர்வு எழுதினார், அவரது கணவர் தேர்வறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளார்.
குழந்தை பிறந்து முழுமையாக குணமாகாத நிலையில், பபிதாவின் ஆர்வத்தை கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயினர்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..