இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் இரண்டில் ஆஸி. அணி வெற்றிபெற்றதுடன், ஒரே ஒரு போட்டியில் இந்தியா வெற்றியீட்டியது. அத்துடன் ஒரு போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
இதன்படி 2-1 என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிட்டதக்கது.
இந்தநிலையில் இன்று ஐந்தாவது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறவிருந்தது. எனினும் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று காலை 11 மணிக்கு மைதானத்தை நடுவர்களான நிகில், ரவி, சம்சுதின் பரிசோதித்தனர்.
இதில், ஈரம் அதிகமாக இருப்பதாக தெரியவந்ததால், போட்டி இரத்து செய்யப்பட்டது.