சன்னி லியோனை இப்படியும் பயன்படுத்தலாமா? அதிர வைத்த விவசாயி!!

346

தன் விவசாய நிலத்தில் படும் கண்திருஷ்டிகளை தடுக்கும் வகையில் சன்னி லியோன் படத்தை விவசாயி ஒருவர் பயன்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் செஞ்சு ரெட்டி, விவசாயியான இவருக்கு சொந்தமாக பல ஏக்கர்கள் நிலம் உள்ளது. தற்போது அறுவடைக் காலம் என்பதால் அவரது பத்து ஏக்கர் நிலத்திலும் பயிர்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

பொதுவாக இது போன்ற காலங்களில் கண்திருஷ்டி படாமல் இருக்க சோலைக்காட்டு பொம்மைகளை பயன்படுத்துவது விவசாயிகளின் வழக்கம்.

ஆனால் சற்று வித்யாசமாக சிந்தித்த செஞ்சு ரெட்டி, பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லீயோனின் சிவப்பு நிற உடை அணிந்த புகைப்படத்தை வைத்து ‘ஏய்.. என்னைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்’ என்ற தெலுங்கு வாசகத்துடன் கூடிய பனர் ஒன்றை தயாரித்து தன் நிலத்தின் முகப்பில் வைத்துள்ளார்.

இது குறித்து செஞ்சு ரெட்டி கூறுகையில், “எனது பத்து ஏக்கர் நிலத்தின் வழியாக செல்பவர்கள் விளைச்சலை பார்த்து பொறாமைப்படுவதாக என் மனதில் பட்டது. அதனால் தான் இப்படி ஒரு பனரை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.