தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண் : கையில் எழுதிவைத்திருந்த தற்கொலை கடிதம்!!

337

ஹரியானாவில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் கல்காவை சேர்ந்தவர் கவுசல்யா, மின்சார பொறியாளராக வேலை செய்யும் பிரமோத் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்ததாக தெரிகிறது, இதனால் மன உளைச்சலுக்கு ஆனான கவுசல்யா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து பிரமோத் குமார் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று கவுசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் அவரது கையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், ‘நான் எனது பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டேன். அதன் பின்னர், எனது கணவர் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்று விரும்பினேன். ஆனால், ஒரு தவறான முடிவு எனது வாழ்வை பாழாக்கிவிட்டது’ என எழுதப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கவுசல்யாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கவுசல்யா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.