காளையிடமிருந்து தனது தம்பியை எட்டு வயது சிறுமி துணிச்சலாக போராடி மீட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
கர்நாடகாவின் ஹன்னவர் தாலூக்காவிலுள்ள நவிலக்கோன் கிராமத்தில், எட்டு வயது சிறுமி தன்னுடைய இரண்டு வயது தம்பியுடன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அந்த வழியாக வேகமாக வந்த மாடு ஒன்று, இவர்களை நோக்கி முட்ட ஆரம்பித்தது.
இதில் அந்த சிறுமி தனது தம்பியை கடை வரை விடாமல் கையில் பிடித்துக் கொண்டு அந்த மாடுடன் இணையாக போராடிக் கொண்டிருந்தார்.
வீட்டின் உள்ளே இருந்த நபர் வெளியில் வந்த அந்த மாட்டை உடனடியாக விரட்டியடித்தார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.