வரதட்சணை பணத்துக்காக ஆண் வேடமிட்டு இரண்டு பெண்களை மணந்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் நகரை சேர்ந்தவர் ஸ்வீட்டி சென் (25). இவர் கிருஷ்ணா சென் என்ற பெயரில் ஆண் போல கடந்த நான்கு ஆண்டுகளாக பேஸ்புக்கில் வலம் வந்துள்ளார்.
அப்போது வெவ்வேறு காலக்கட்டங்களில் இரண்டு பெண்களை வரதட்சனைக்காக மணந்துள்ளார். இதில் இரண்டாவது மனைவிக்கு கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டு பொலிசில் புகார் அளித்ததையடுத்து இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரித்ததில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவயது முதலே ஆண் போல வேடமிட்டு நடமாடுவது, தலைமுடியை வெட்டிக் கொள்வது போன்ற பழக்கம் ஸ்வீட்டிக்கு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது ஸ்வீட்டி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது என்ற நிலையில் ஆண் வேடமிட்டு ஏமாற்றியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.