நடுரோட்டில் இளம்பெண் கொலை : புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

287

காதலர் தினத்தை உலகெங்கும் இளைஞர்கள் கொண்டாடி வந்த சந்தோஷ நாளில் இளம்பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது.

காசியாபாத்தை சேர்ந்த பெண் பிரியங்கா(வயது 22), சில நாட்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார், மாலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு சென்று வீடுதிரும்பிக் கொண்டிருந்த பிரியங்காவை வழிமறித்த சச்சின் சர்மா சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பிரியங்காவின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சச்சின் சர்மாவை கைது செய்துள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரி தேர்வு எழுத வந்த பிரியங்காவை சச்சின் நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததும், இதனால் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.

சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் பழிவாங்கும் நோக்குடன் பிரியங்காவை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சச்சினை சிறையிலிருந்து வெளியேவிட்ட பொலிஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.