கணவனை தீர்த்து கட்டிய மனைவி சிக்கியது எப்படி?

448

திருவண்ணாமலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள காட்டுப் பகுதியில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சுரேஷின் மனைவி தீபா மீது சந்தேகப்பட்டு விசாரித்ததில், தனது கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

மேப்பத்துறையைச் சேர்ந்த பிரபுவுக்கும் தீபாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இதையறிந்த சுரேஷ், தீபாவை கண்டித்துள்ளார்.

இதையடுத்து பிரபுவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த தீபா சுரேஷை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி சுரேஷை காட்டுபகுதிக்கு அழைத்து சென்று பிரபு உடன் சேர்ந்து அவர் தலையில் கல்லை போட்டு தீபா கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபு மற்றும் தீபாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.