தங்கையை கூலிப் படை வைத்து கடத்திய அக்கா : சினிமா பாணியில் துரத்தி பிடித்த பொலிசார்!!

335

தமிழகத்தில் தங்கையை அக்கா கூலிப்படை வைத்து கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி. கணவனை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் அங்கிருக்கும் நகராட்சியில் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் புவனேஷ்வரி நின்று கொண்டிருந்த போது, திடீரென்று காரில் வந்த மர்ம கும்பல் அவரை கடத்திக் கொண்டு சென்றது.

இந்த தகவலை அறிந்த பொலிசார், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் காரில் தப்பிச் சென்றதால், சுமார் 3 கி.மீற்றர் துரத்தி பெல்ட் செண்டர் அருகே மடக்கி பிடித்தனர். அதன்பின் பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யும் கூலிப்படை என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், புவனேஷ்வரியின் அக்காவான சரஸ்வதி கூறியதன் காரணமாகவே, அவரை கடத்தியதாகவும் மற்றபடி எங்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளனர்.

தனது கணவருடன் புவனேஷ்வரி நெருங்கி பழகியதால், ஆத்திரமடைந்த சரஸ்வதி அவரை கடத்தி மிரட்டுவதற்காக கூலிப்படையை அனுப்பி வைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.