குழந்தையின் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிய தம்பதி!!

348

இந்தியாவில் சந்திர கிரகணத்தன்று குழந்தையின் தலையை வெட்டிப் பலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் உப்பிலில் உள்ள வீட்டின் மேல்தளத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை கிடந்துள்ளது.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள் உடனடியாக சம்பவம் இடத்தில் விரைந்து வீட்டின் உரிமையாளரான ராஜசேகர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரும், அவரது மனைவியும் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, சாலையோர நடைபாதையில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த பெண்குழந்தையைக் கடத்தி வந்து, மூசி ஆற்றங்கரையில் குழந்தையின் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிவிட்டுத் தலையை மட்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து பூஜை நடத்தியதாக கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.