திருமணமாகி 2 நாட்களில் முன்னாள் காதலனால் கணவன் படுகொலை!!

384

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங் என்ற வாலிபருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்கு பின்னர் உறவினர்கள் வீட்டுக்கு சென்று விருந்துகளில் கலந்து கொண்டு வந்த லகன் சிங் திருமணமான இரண்டு நாள் கழித்து திடீரென மாயமாகியுள்ளார்.

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் யமுனை நதி அருகில் லகன் சிங்கின் மோட்டார் சைக்கிளை கண்ட மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் அப் பகுதியை சுற்றி தேடிய நிலையில் லகன் அங்கு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் முன்னாள் காதலன் அஜய் கோயல் லகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பிரியங்கா அஜய்யுடன் பழகிய நிலையில் பின்னர் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து லகனின் தொலைப்பேசி இலக்கத்தை எப்படியோ கண்டுப்பிடித்த அஜய் அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

ஆனால் இது குறித்து லகன் வெளியில் சொல்லாமல் இருந்துள்ள நிலையிலேயே அஜய்யால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லகனை கொலை செய்யும் அளவுக்கு அஜய் செல்வார் என தான் நினைக்கவில்லை என பிரியங்கா பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளபொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.