இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

314

சென்னையில் இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்து வந்த நிலையில், இன்று அவர் மீது அசிட் ஊற்றி தீ வைத்த ராஜா பின்னர் தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து வலியால் துடித்த யமுனா மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தப்பியோடிய ராஜாவை பொலிசார் கைது செய்து, அசிட் வீச்சுக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.