கணவரை கொன்ற மனைவி : 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்!!

325

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 40), கட்டிட தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராஜசேகர், கடந்த 2007ம் ஆண்டு தாய்நாட்டுக்கு திரும்பினார், சில நாட்களிலேயே திடீரென மாயமானார். அக்கம்பக்கத்தினர், சொந்தபந்தங்கள் சுதாவிடம் விசாரித்த போது, ராஜசேகர் மறுபடியும் வெளிநாடு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ராஜசேகர் ஊர்பக்கம் வரவில்லை, இதனால் சந்தேகமடைந்த ராஜசேகரின் அண்ணன் ரவி பொலிசில் புகார் அளித்தார். இதன்பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர், ஏற்கனவே தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு சுதா மகனுடன் வாகவிளை பகுதியில் இருந்தது தெரியவந்தது.

மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜசேகர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதாவது, சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆன்றின் ஷிபு என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாம், இதுபற்றி தெரியவர ராஜசேகர் மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று இருவரும் ஒன்றாக இருப்பதை ராஜசேகர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதில் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து கழிவறை தொட்டியிலும் உடலை வீசியுள்ளனர்.

இதனைதொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்ததில் குற்றம் நிரூபணமானது. சம்பவம் நடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.