முதல் அரசியல் மேடையிலேயே பொய் பேசிய கமல் : ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

675

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவதில்லை என நடிகர் கமல்ஹாசன் பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் அப்துல் கலாம் இறுதிசடங்கில் பங்கேற்காத நீங்கள் அவர் வீட்டிலிருந்து கட்சியை தொடங்குவது ஏன் என கேள்வியெழுப்பட்டது.

அதற்கு, நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என பதிலளித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காரணம் கமலின் குருநாதர் ஆர்.சி சக்தி, நடிகை மனோரமா, நடிகர் நம்பியார், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோர் இறுதி ஊர்வலங்களில் கமல் கலந்து கொண்டுள்ளார். இதில் சிவாஜி, சக்தி இறுதி ஊர்வலத்தில் கடைசி வரை அவர் இருந்தார்.

இப்படியிருக்கையில் கமல் ஏன் இப்படி பொய் சொன்னார் என சமூகவலைதளத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. கமல் பங்கேற்ற இறுதி ஊர்வலங்களின் புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறன.