48 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவிடம்!!

1299

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிட கட்டுமான பணிகளை மேற்கொள்ள 5 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரியதாக ஆர்.கிருஷ்ணமூர்த்தி & கோ நிறுவனத்துக்கு 48 கோடியில் ஓப்பந்தம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மெரினாவில் பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தத்து. பின்னர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.

இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் ஜெயலலிதாவுக்கு 40 கோடி அளவில் பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்க திட்டமிட்டு விண்ணப்பம் கோரியுள்ளனர்.

இதுவரை 5 நிறுவனங்கள் கட்டுமான பணிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது. இன்று முதல் விண்ணப்ப படிவங்களை ஆராய்ந்து, வரும் பொதுப்பணி மற்றும் கட்டுமான துறை அதிகாரிகள் இறுதியாக 48 கோடிக்கு ஆர்.கிருஷ்ணமூர்த்தி & கோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளனர்.