இளம்பெண்னின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

691

 
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் காதலிக்க மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை வாளால் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் கோட்மா கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பாடசாலை ஒன்றில் படித்து வந்துள்ளார் கொலை செய்யப்பட்ட பூஜா பனிகா. இவருக்கு சில ஆண்டுகளாக தொடர்ந்து காதல் கோரிக்கை விடுத்து வந்துள்ளார் இளைஞர் ஒருவர்.

ஆனால் தமது குடும்ப சூழல் கருதி அந்த காதல் கோரிக்கையை பூஜா ஏற்க மறுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளைஞர், தமது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததும் இன்றி, தம்மை புறக்கணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் காத்திருந்து குறித்த இளம்பெண்னை வாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிரியர் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனிடையே சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டனர். மட்டுமின்றி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நீண்ட வாளையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.