வவுனியா பூந்தோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற முதியோர் தின விழா!!(படங்கள்)

345

நேற்று மாலை 3 மணியளவில் வவுனியா பூந்தோட்ட நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் சர்வதேச முதியோர்தின விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.

இவ் விழாவிற்கு வைத்தியர் சு.பஞ்சலிங்கம் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பூந்தோட்ட முதியோர் சங்கத் தலைவர் திரு.க.வேலாயுதபிள்ளை வழங்கினர்.

பிரதம விருந்தினராக க.உதயராசா (பிரதேச செயலாளர் வவுனியா) மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.ஜோ.பெ.கிறிஸ்தோபர் (தலைவர் ஒய்வூதியோர், முதியோர் நலனுபாய சங்கம் வவுனியா), வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் T.K.இராசலிங்கம், செயலாளர் கோ.சிறிஸ்கந்தராசா, திரு.தமிழ் அருவி சிவகுமார் ஆகியோரும் லயன்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் திரு.கருணாகரன், பெரியார்குள அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு.சிவலிங்கம், பூந்தோட்ட சனசமூக நிலைய தலைவர் திரு.ந.கருணாநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வில் இப் பிரதேசத்தின் வயதுமுதிர்ந்த இருவரை பிரதேச செயலாளர் திரு.க.உதயராசா பொன்னாடை அணிவித்து கௌரவித்துடன் மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்..

முதியோர் தின விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும். நாளை முதல் பிரதேச செயலகத்திற்கு தன்னை சந்திக்க வருவோரில் முதியோர்களுக்கு முதலிடமும், குழந்தைகளுடன் வருவோர்களுக்கு இரண்டாம் முக்கியத்துவமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் திரு .சூ.ஞானப்பிரகாசம் முன்னால் தலைவர் பலநோக்கு சங்கம் அவர்களுக்கும் பூந்தோட்டம் முதியோர் சங்க தலைவர். க.வேலாயுதபிள்ளை அவர்களுக்கும் பிரதேச செலாளர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளை வழங்கிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் கௌரவித்தார். விழாவின் நன்றியுரையை பூந்தோட்ட முதியோர் சங்க செயலாளர் திரு.தா.சிவஞானம் வழங்கினர்.

-பிரதீபன்-

1

2 3 4 5 9 8 7 6 10 11 12 13 16 15 14