என்னை காப்பாற்றுங்கள்: கணவர் கொடுமை செய்கின்றார் : வீடியோ வெளியிட்ட பெண் தற்கொலை!!

1274

தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு இரத்தக்காயங்களுடன் வீடியோவில் பேசிய பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் சத்யா. கடந்த 25ம் திகதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார், விஷயமறிந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்கொலைக்கு முன்பாக அவர் தன்னைக் காப்பாற்றுமாறு கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.
வட்ஸ்அப்பில் வைரலாகும் அந்த வீடியோவில், தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு ரத்தக்காயங்களுடன் பேசுகிறார்.

கணவர் தன்னை வீட்டில் அடைத்து வைத்து சோறு தண்ணி இல்லாமல் சித்ரவதை செய்வதாகவும், கணவரை நம்பி வந்த தனக்கு பல கொடுமைகள் நடந்ததாகவும் விவரிக்கிறார்.

மேலும் தன்னிடம் செல்போன் இல்லாததால் அருகில் உள்ள நபரின் செல்போனை வாங்கி இதை பதிவு செய்ததாகவும், தங்கை போல் நினைத்து காப்பாற்றுமாறும் கதறுகின்றார்.

இவர் தற்கொலைசெய்துகொண்டதைத் தொடர்ந்து உடனடியாக சத்யாவின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனங்கள் குவிகின்றன.