மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன்!!

527

தூத்துக்குடியில் குடும்பத்தகராறின் காரணமாக மனைவியை கணவன் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி டி.சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து, இவரது மனைவி சாந்தி. இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி விட்டது, எனினும் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

மகள் வீட்டுக்கு சாந்தி அடிக்கடி சென்று வந்துள்ளார், மகள் வீட்டுக்கு செல்ல வேண்டாம், அவளை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என அய்யாமுத்து கூறியுள்ளார்.

இதனால் சில நாட்களுக்கு முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றவே கோபத்தில் அய்யாமுத்து, சாந்தியை கடுமையாக தாக்கியுள்ளார். அவரது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்து தப்பியோடிவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சாந்தியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 26ம் திகதி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள தாளமுத்துநகர் பொலிசார் அய்யாமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.