மாமா விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிய சிறுவன் : குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

932

கள்ளக்காதலியின் மகனை கொலை செய்த நபர் பொலிஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மனைவி மஞ்சுளா. தம்பதிக்கு ரித்தீஷ் சாய் (9) என்ற மகன் இருந்தான்.

மஞ்சுளாவுக்கு நாகராஜ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்த நிலையில், இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த கார்த்திகேயன் பொலிசில் புகார் அளிக்க பொலிசார் நாகராஜை கைது செய்தனர். பின்னர் சிறையிலிருந்து வெளியில் வந்த நாகராஜ் கார்த்திகேயனை பழிவாங்க திட்டமிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டியூஷனில் இருந்த ரித்திஷை கடத்தி சென்றுள்ளார் நாகராஜ்.

பின்னர் சேலையூரில் உள்ள தனது வீட்டில் ரித்தீஷை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் நாகராஜை கைது செய்தனர். அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், காலியாக இருந்த பீர் பாட்டிலை உடைத்து ரித்தீஷை கீழே தள்ளி, அவனது கழுத்தை அறுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ரித்தீஷின் கழுத்து அறுபடாத நிலையில், அவன் மாமா.. மாமா என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளான்.

அவனை விடாத நாகராஜ் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் ரித்தீஷ் தலையில் ஓங்கி அடித்து தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். நாகராஜின் கொடூர செயல் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது