திருமணமான சில மணிநேரங்களில் புதுமணத் தம்பதியருக்கு ஏற்பட்ட சோகம்!!

873

தமிழ்நாட்டில் புதுமண தம்பதியினரின் கண்ணெதிரிலேயே மணமகனின் தாய் மற்றும் தந்தை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(54), இவரது மகன் சசிகுமாருக்கும்(27), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா(23) என்ற பெண்ணுக்கும் நேற்று காலை பெங்களூருவில் திருமணம் நடந்தது.

தொடர்ந்து, புதுமணத் தம்பதியினர் மறுவீடு நிகழ்ச்சிக்காக, வேலூரில் உள்ள காவேரிப்பாக்கத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

புதுமணத் தம்பதியினர் ஒரு காரிலும், மணமகனின் பெற்றொர் மற்றொரு காரில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆம்பூர் அருகே சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். ஆனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து, சாலையோரம் இருந்த பள்ளத்திற்குள் விழுந்தது.

இதில் மணமகனின் தந்தை கமலக்கண்ணன், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் அவர்களுடன் பயணித்த உறவினர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், உயிரிழந்த மணமகனின் பெற்றோரின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.