ரயிலிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை : காரணம் என்ன?

584

கணவரின் தகாத உறவை பற்றி கேள்வி கேட்டபோது திட்டியதால் கோபத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த முரளியின் மகன் ரோஸ், இவருக்கும் ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார், இந்நிலையில் தனது கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கணவரிடம் கேட்டபோது, அவரது குடும்பமே சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

உடனடியாக தனது பெற்றோரிடம் ஜீவிதா கூற, அவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் கள்ள உறவை கணவர் தொடர்ந்ததால் மறுபடியும் ஜீவிதா தட்டிக் கேட்டுள்ளார்.

கடுமையான வார்த்தைகளால் ரோஸ் திட்டவே, மனமுடைந்த ஜீவிதா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயிலில் ஏறியுள்ளார்.

அடையாறு பாலம் அருகே வந்த போது ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார், தகவலறிந்து விரைந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.