தானம் பெற்ற கண்களை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம் : அதிர்ச்சியடைந்த கணவர்!!

1240

நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கண்களை செவிலியர்கள் ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துாத்துக்குடியைச் சேர்ந்த சிவகுருவின் மனைவி சாந்தா(வயது 35), கடந்த பிப்ரவரி மாதம் 26ம் திகதி உறவினர் திருமணத்திற்காக பைக்கில் சென்ற போது விபத்து நேர்ந்தது.

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், சாந்தா மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சாந்தா மூளைச்சாவு அடைந்ததால், உடல் உறுப்புகளை தானம் செய்ய சிவகுரு முடிவெடுத்தார். இதற்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு சிறுநீரகம் அங்குள்ள நோயாளிக்கும், மற்றொன்று தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கண்கள், நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

கண்களை தானமாக பெற்ற செவிலியர்கள் பெட்டியுடன் ஆட்டோவில் ஏறிச்சென்றனர், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.