சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்தனர் : இளைஞனின் கண்ணீர் வாக்குமூலம்!!

616

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணுடன் தகாத உறவு கொண்டதாக இளைஞர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சஹரன் பூர் அருகில் உள்ளது இந்திரா காலனி, இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண்ணும் தகாத உறவு இருப்பதாக உள்ளூர் மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுதொடர்பாக பஞ்சாயத்தினர் விசாரித்த போது, தனக்கு அப்பெண் யார் என்றே தெரியாது என பதிலளித்துள்ளார்.

இதனை நம்ப மறுத்த பஞ்சாயத்தினர், குறித்த இளைஞரை அடித்து உதைத்ததோடு, சிறுநீரை குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர், இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்தவர்கள், இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் இது குறித்து கூறுகையில், ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, அவருடன் தகாத உறவு வைத்திருக்கிறாய் என்று கூறினார்கள்.

அவர்கள் கூறிய பெண் யாரென்றே எனக்கு தெரியாது என்பதால், இல்லை என்றேன். அவர்கள் அதை நம்பாமல் என்னை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து உதைத்தனர்.

எனக்கு பயமாக இருக்கிறது, என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள், பொலிசார் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.