என் கணவனுடன் வெளியில் செல்லாதீர்கள் : தற்கொலை செய்து கொண்ட மனைவி கெஞ்சல்!!

1090

தமிழகத்தில் ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் விவகாரத்தில், கணவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணிடம், அப்பெண் பேசியது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை பெண்ணின் தாயார் பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்த முரளியின் மகன் ரோஸ். இவருக்கும் ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜீவிதாவுக்கு தனது கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் கணவரிடம் கேட்ட போது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து ஜீவிதா அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன் பின் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இருந்த போதிலும் ஜீவிதாவின் கணவர் வேறொரு பெண்ணுடான இருந்த உறவை விடவில்லை. இதனால் மீண்டும் ஜீவிதா இது குறித்து கேட்ட போது, அவர் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பெரிதும் மனமுடைந்த ஜீவிதா ரயிலில் சென்று கொண்டிருந்த போது அடையாறு பாலம் அருகே வந்த போது ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜீவிதாவின் தற்கொலையை சாதாரணமான தற்கொலை வழக்காக ரயில்வே பொலிசார் பதிவு செய்த நிலையில், ஜீவிதாவின் தாயார் என்னுடைய மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜீவிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணிடம், தனது கணவருடனான நட்பை விட்டுவிடும்படி கேட்கும் ஆடியோவையும் ஜீவிதாவின் தாயார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதில் ஜீவிதா என் கணவருடன் எங்கும் வெளியில் செல்லாதீர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. குழந்தை ஒன்று உள்ளது. உங்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ, நாங்கள் நட்பின் அடிப்படையில் தான் பழகுகிறோம், வேண்டுமென்றால் உங்கள் கணவனிடம் இதை சொல்லுங்கள், அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது என்று திமிராக கூறியுள்ளார்.

மேலும் ஜீவிதா கடந்த ஞாயிறு அன்று வெளியில் சென்றுள்ளீர்கள், அடுத்த பெண்ணின் கணவருடன் செல்வது முறையா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண், சும்மா தான் வெளியில் சென்றோம் என்று கூற, ஜீவிதா நீங்கள் நண்பர்களுடன் செல்லுங்கள், அடுத்தவரின் கணவருடன் செல்லாதீர்கள் என்று ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோவைத் தொடர்ந்து ஜீவிதாவின் கணவரை பொலிசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.