இந்தியாவில் விபத்தி்ல் சிக்கியவரின் காலை துண்டித்து அவரிடமே தலைக்கு தலையணையாக படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதில் இடது கால் பலத்த காயத்துடன் அங்குள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது மருத்துவர்கள் இளைஞரின் இடது காலை துண்டித்த நிலையில் அதையே அவர் தலைக்கு தலையணையாக வைத்துள்ளனர். தலையணை வழங்காத நிலையிலே இதை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட அது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.






