என் குடும்பத்திடம் சொல்லாதீர்கள் : வீதியில் மயங்கிய இளைஞனுக்கு பொலிஸ் காட்டிய கருணை!!

724

தமிழகத்தில் வேலை தேடி வந்த இளைஞன் மயங்கி விழுந்ததைக் கண்ட பொலிசார் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி கொடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கோயமுத்தூரின் நீதிமன்றம் வளாகம் முன்பு ஒருவழிப்பாதையின் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில், போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு தலைமைக் காவலர் மகேஷ்வரன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது சாலையைக் கடந்த இளைஞர் ஒருவர், திடீரென்று மயங்கி விழுந்ததைக் கண்ட மகேஷ்வரன் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி கொடுத்தார்.

மயக்கம் தெளிந்த பின் அந்த இளைஞனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று மகேஷ்வரன் முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞனோ மருத்துவமனை எல்லாம் வேண்டாம், ஒரு சாக்லேட் மட்டும் கொடுத்தால் போதும் எனவும், இதைப் பற்றி என் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் பின் அவரிடம் நிலை குறித்து கேட்ட போது, தான் வேலை தேடுவதற்காக கோயமுத்தூர் வந்ததாகவும், நான் தான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உடனடியாக அவர் நான் உனக்கு வேலை தயார் செய்து தருகிறேன். முதலில் சாப்பிடு என்று கூறி சாப்பிட வைத்து அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் உலா வர, இதைக் கண்ட இணையவாசிகள், சில காவலர்கள் அத்து மீறி ஈடுபட்டாலும், அனைத்து காவலர்களும் அவர்களைப் போன்று இல்லை என பாராட்டி வருகின்றனர்.