தேனி குரங்கணி தீ விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் விவின் (வயது 34), என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு மலையேறும் பயிற்சி என்றால் அலாதி பிரியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பயிற்சியின் போதே திவ்யா என்ற பெண்ணிடம் மனதை பறிகொடுத்துள்ளார்.
பெற்றோரின் சம்மதப்படி, இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்த நிலையில், திவ்யாவின் தந்தை விஸ்வநாதனின் மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
விஸ்வநாதன் இறந்த நிலையில் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இருவரும் குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
விபத்தில் சிக்கி விவின் உயிரிழந்து விட்டார், திவ்யா உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களது குடும்பத்தினர் தேனிக்கு விரைந்துள்ளனர்.






