இருட்டில் கணனி, கைத்தொலைபேசி பார்ப்பது ஆபத்தானதா?

625

இன்­றைய யுகத்தில் கணனி மற்றும் கைய­டக்கத் தொலை­பேசி பாவனை என்­பது தவிர்க்­க­மு­டி­யாத பழக்­க­வ­ழக்­க­மாகி­ விட்­டது. ஆனால், அவற்றை அள­வுக்கு மீறிப்­பா­விப்­பதால் கண்­ணுக்கு ஆபத்து நேரி­டு­கி­றது என்­பதை பலரும் மறந்­து­வி­டு­கின்­றனர்.

உண்­மையில் கண­னியை தொடர்ந்து பயன்­ப­டுத்­து­ப­வர்கள் இரு­ம­ணி­நே­ரத்­துக்­கொ­ரு­த­டவை கண்­ணுக்கு ஓய்வு வழங்­க­வேண்­டி­யது அ­வ­சி­ய­மாகும். மேலும் இவற்றை இருட்­டுக்குள் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. எப்­போதும் வெளிச்சூ­ழலில் மட்­டுமே கணனி, தொலைக்­காட்சி, கைய­டக்கத் தொலை­பேசி என்­ப­வற்றைப் பாவிக்­க­வேண்டும் எனக் கூறு­க­ின்றனர் கண் வைத்­திய நிபு­ணர்கள்.

லண்டன் தமிழ் வைத்­திய நிபு­ணர்கள் சங்­கத்தின் அனு­ச­ரணையுடன் கல்­முனை ஆதா­ர­வைத்­தி­ய­சா­லையில் இரு­நாட்­களில் (25.26) 70இலட்­ச­ரூபா பெறு­ம­தி­யான 140 ஏழை கண்­நோ­யா­ளர்­க­ளுக்­கான கற்­றரக்ட் சத்­தி­ர­சி­கிச்­சைகள் முற்­றிலும் இல­வ­ச­மாக செய்­து­மு­டிக்­கப்­பட்­டன.

வைத்­தி­ய­ அத்­தி­யட்­ச­கர்­க­ளான இரா.முர­ளீஸ்­வரன் (கல்­முனை) குண.சுகுணன் (களு­வாஞ்­சிக்­குடி) ஆகி­யோரின் ஏற்­பாட்டில் இச்­சேவை நடை­பெற்­றது.

லண்­ட­னி­லி­ருந்­து ­வந்த ஈழத்து கண்­வைத்தி­ய­ நி­பு­ணர்­க­ளான எம்.லோகேந்­திரன் (வட்­டுக்­கோட்டை) ராதா தர்­ம­ரெட்ணம் (களு­வாஞ்­சிக்­குடி) காந்­தா­ நி­றஞ்சன் (மட்­டக்­க­ளப்பு) ஆகியோர் பிர­தான ­பா­க­மேற்­றனர்.

நாட்­டி­லுள்ள பிர­பல கண்­வைத்­தி­ய­ நி­பு­ணர்­க­ளான எஸ்.சந்­தி­ர­குமார்(யாழ்ப்­பாணம்), ஏ.பி.கங்­கி­லி­பொல(கல்­முனை) பி.டயஸ் (மொன­ரா­கல) உள்­ளிட்ட 8 வைத்­தி­ய­ நி­பு­ணர்கள் இச்­சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்­தனர்.

லண்­ட­னி­லி­ருந்து வந்த டாக்டர் மகா­ரத்னம் லோகேந்­திரன் யாழ்.வட்­டுக்­கோட்­டை­யைச் ­சேர்ந்­தவர். பிர­ப­ல­மான கண்­வைத்­தி­ய ­நி­பு­ண­ரான இவர் இலங்கை உள்­ளிட்ட உல­கி­லி­ருந்து கண்­வைத்­தி­ய ­நி­பு­ணத்­துவ கற்­கைக்­காக லண்­ட­னுக்கு வரும் வைத்­தி­யர்­க­ளுக்கு கற்­பித்­து­ வ­ரு­ப­வ­ராவார்.

அவர்­களின் கருத்­துக்கள் வரு­மாறு டாக்டர் மகா­ரத்னம் லோகேந்­திரன் கூறு­கையில்;

கடந்த 30வருட சேவையில் இது­வரை 4000பேருக்கு கற்றக்ட் சத்­தி­ர­சி­கிச்­சையை செய்­துள்ளோம்.

2002இல் அப்­போது சாயி நிலை­யமும் அர­சாங்க அதி­பரும் விடுத்­த­வேண்­டு­கோளுக்­கி­ணங்க யுத்­த­நி­றுத்த காலத்தில் கண்­சி­கிச்சை முகாமை பல சிர­மங்­க­ளுக்­கு­மத்­தியில் நடத்­தினோம்.

பின்பு முல்­லைத்­தீவு, வவு­னியா, யாழ்ப்­பாணம் போன்ற பகு­தி­களில் தொடர் மருத்­துவ சேவையை வழங்கி வந்தோம். 2012இல் மீண்டும் மன்னார், முல்­லைத்­தீவு பகு­தி­களில் செய்தோம்.

2013இல் மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா, கண்டி போன்ற பிர­தே­சங்­களில் கண் சிகிச்சை முகாம்­களை நடத்­தினோம் . கல்­மு­னைக்கு வரு­வது இதுவே முதற்த­ட­வை­யாகும்.

2013இல் மட்­டக்­க­ளப்பு வந்த 100பேருக்கு கற்றக்ட் சிகிச்­சையை வழங்­கினோம். கண்­இமை சிகிச்சை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை என்­ப­னவும் செய்தோம்.

வைத்­தி­ய­க­லா­நிதி டாக்டர் காந்­தா­ நி­றஞ்சன் கருத்­து­ரைக்­கையில்:

இலங்­கை­யைச் ­சேர்ந்த 3000 தமிழ் வைத்­தி­யர்கள் ஐக்­கி­ய­ இ­ராச்­சி­யத்தில் வாழ்­கின்­றனர். ஆனால் ஆக 400பேர் எமது அமைப்­பி­லுள்­ளனர். அவர்­க­ளது பங்­க­ளிப்­பிலே இந்த மாபெரும் சேவை­யைச் ­செய்­ய­மு­டி­கி­றது.

2002இல் ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­வ­மைப்பு இலங்­கையில் குறிப்­பாக யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­குப்­ பி­ர­தே­சங்­களில் எமது வைத்­தி­ய­சே­வையை வழங்­கி­ வ­ரு­கின்­றது.

நாம் அர­ச­சார்­பற்ற, கட்­சி­சார்­பற்ற அமைப்பு. தேவை­கண்­ட­வி­டத்து நலி­வுற்ற எமது மக்­க­ளுக்கு மருத்­து­வ­சே­வையைச் செய்து வரு­கின்றோம் என்றார்.

வைத்­தி­ய­நி­புணர் டாக்டர் ராதா தர்­ம­ரெட்ணம் கூறு­கையில்;

எமது அமைப்பின் உறுப்­பி­னர்­களின் மாத­சந்தா சேக­ரிப்பு பணத்தில் சிகிச்­சைக்கான உப­க­ர­ணங்­களை மட்­டுமே வாங்­கு­கின்றோம். அதா­வது கண்­வில்­லை­கள், அதற்­கான சிறு உப­க­ர­ணங்கள் சில­வற்றை வாங்­கு­கின்றோம்.

மற்­றும்­படி நாம் இங்கு வந்­து­போ­வது, மற்­றைய செல­வுகள் எமது சொந்த செல­வில்தான்.இதனை சேவை­யாகச் செய்­கின்றோம்.இங்கு பூரண ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் கிடைக்­கி­றது.

மட்டு. படு­வான்­கரை மக்கள் பெரு­ம­ளவில் இந்த கற்றக்ட் நோயால் பீடிக்­கப்­பட்­டுள்­ளனர். களு­வாஞ்­சிக்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நான் செய்த சோத­னையில் சுமார் 1000பேர­ளவில் கற்­றக்ட்டால் பீடிக்­கப்­பட்­டுள்­ள­ரென்று தெரிந்­தது. ஸ்கி­ரினிங் 800 பேருக்­குச் ­செய்தோம். அவர்கள் அனை­வ­ருக்கும் கற்றக்ட் சிகிச்சை செய்ய வேண்­டி­யுள்­ளது. எனினும் மோச­மா­க­வுள்ள ஆக 150பேருக்கு இம்­முறை செய்­கிறோம் என்றார்.

டாக்டர் லோகேந்­திரன் கூறு­கையில்;

லண்­டனில் 65வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கே இந்த கற்றக்ட் வரு­கி­றது. ஆனால் இங்கு 40 – 45வய­தி­னிலே வரு­கி­றது. இதற்கு காரணம் இலங்­கையில் சூரியன் அண்­மை­யி­லி­ருப்­பதும் அதி­க­நீ­ரி­ழப்பும்.

அங்கு நீரி­ழிவு நோய் வந்தால் பிர­தி­ வ­ரு­டமும் அதற்கு சிகிச்­சை­பெறும் அதே­வேளை, கண் ஸ்­கி­ரி­னிங் செய்­யவும் வேண்டும். ஆனால் இங்கு அந்த நடை­முறை இல்­லா­மை­யினால் பலர் எளி­தாக இந்­த­நோய்­களை பெற்றுக் கொள்­கி­றார்கள் என்றார்.

டாக்டர் காந்­தா­நி­றஞ்சன் கூறு­கையில்:

சூரி­ய­ஒ­ளிக்­ கு­றை­பாடு, போது­மான வெளிச்­ச­மின்மை இவை­யெல்லாம் மயோ­பி­யாவை உரு­வாக்­கக்­கூ­டி­யவை. ரிவி கணனி­யில் இருந்து சூடா­ன­ வளி வரு­கி­றது. இது கண்­ணைப் பா­திக்­கக்­கூ­டி­யது.இதனால் உலர்கண் வரலாம். அதா­வது கண்­ணீரை வற்­ற­வைப்­பதால் வரண்ட உலர்கண் உரு­வாகும்.

இருட்டில் கணனியோ, போனோ பார்க்­கக்­கூ­டாது. ஜப்­பானில் இதனை றெட்ஜ என்­பார்கள். இயற்கை கண்ணீர் வற்றிவிடும். இதனால் செயற்கை துளிகள் இடவேண்டும்.

டாக்டர் ராதா கூறுகையில்;

வாகரையில் நாம் ஒரு பெற்றோரை இழந்த இல்லத்தை நடத்திவருகிறோம்.அது திலகவதியார் இல்லம் அங்கு 50பிள்ளைகளுள்ளனர். 1997இலிருந்து ஆரம்பித்தோம். பூரண நிதிஆதரவு நாமே வழங்குகிறோம்.

கண்ணைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேவை. ஊதா நிறம் கலந்த கதிர் பாதிக்காத கண்ணாடிகளை தாராளமாக அணியலாம். வெறுமனே கண்ணாடிகளை அணியக்கூடாது.

மொத்­தத்தில் கண்­ணைப் ­பா­து­காப்­ப­தென்றால் விழிப்­பு­ணர்வு அவ­சியம். நேரத்­துக்கு உரிய சிகிச்­சை­ப் பெற்றால் சிக்­க­லைத்­ த­விர்க்­கலாம்.