இந்தியாவில் புதுப்பெண்ணை கணவரின் குடும்பத்தினர் சேர்ந்து எரித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் போரால்டா கிராமத்தை சேர்ந்தவர் பிஸ்வாஜித் கிரி. இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கிரியின் மனைவியை அவர் மாமியார் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
இதை கிரி தட்டி கேட்காத நிலையில், தனது அம்மாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். ஆனால் இதற்கு கிரி மனைவி சம்மதிக்காத நிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று கிரி, அவரின் அம்மா மற்றும் அப்பா சேர்ந்து புதுப்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர்.
வலியால் துடித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள கிரி மற்றும் அவர் பெற்றோரை தேடி வருகிறார்கள்.






